வாகன தண்டப் பத்திரம் தனது தாய்மொழியான தமிழில் தரப்படவில்லையென சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவருக்கு அபராதம் விதிக்காமல், சாரதி அனுமதிப்பத்திரத்தை மீள கையளித்துள்ளது.
மாங்குளம் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது.
நபர் ஒருவருக்கு போக்குவரத்து குற்றத்திற்கான தண்டப்பத்திரத்தை மாங்குளம் பொலிசார் சிங்களத்தில் வழங்கியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, தனது தாய்மொழியான தமிழில் தண் டப்பத்திரம் வழங்கப்படவில்லையென குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக அவரினால் வெளியிடப்பட்ட வீடியோ
சிங்களத்தி ல் தண்டப்பத்திரம் வழங்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை மீள கையளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.